முக்கிய செய்திகள்:
# "கற்பழிப்பு காட்சியில் நடிக்க பயப்படமாட்டேன்,தொடர்ந்து
நடிப்பேன்"நடிகை கீர்த்திசாவ்லா பேட்டி.(இதுவல்லவோ வீரம்!)
சமீபத்தில் திரைக்கு வந்தவுடன் திரையை விட்டு வெளியேறிய
ஸ்வேதா என்ற படத்தில் கீர்த்திசாவ்லா அவர்கள் நன்றாக
திறமை காட்டியதாக ஊர் முழுக்க பரபரப்பான பேச்சு அடிபட்டது.
நான் கூட போனும்னு நினைச்சேன் ஆனா அதுக்குள்ள படத்தை
எடுத்து விட்டார்கள்(ச்சே...).
மேல உள்ளே பேட்டி படம் வெளிவந்த நான்கு நாள் கழித்து
கீர்த்திசாவ்லா கூறியதாம்.(எப்படியெல்லாம் படத்துக்கு விளம்பரம்
செய்றாங்க!!).ஏன் இது மாதிரி ஒரு விளம்பரம் ஏதோ நான்
நடித்து தேசிய விருது வாங்குவேன் என்றாள் பாராவயில்லை
ஆனால் கீர்த்தியோ கற்பழிப்பு காட்சியில் தொடர்ந்து நடிப்பேன்
என்கிறார்...என்னமோ போங்க.....
ஆனாலும் கீர்த்திசாவ்லாவின் சேவை
தமிழ்நாட்டுக்கு தேவை.(ஹீ.. ஹீ..).
******************************************
விளம்பர இடைவேளை:
(பி.கு: தற்புகழ்ச்சிக்கு அல்ல)
போன வாரம் ஒரு அன்பர் கைபேசியில் அழைத்தார்.அவர்
கூறியதாவது தான் பப்ளிக் சர்வீஸ் தேர்வுக்கு தயார்படுத்தி
கொள்ள எனது பொது அறிவு செய்திகள் மிகவும்
பயனுள்ளதாக இருக்கிறது என்று என்னை மிகவும்
பாராட்டினார்.அப்புறம் மப்புசாமி சாரி குப்புசாமி அப்படின்னு
ஒருத்தர் நெதர்லாந்தில் இருந்து மெயில் அனுப்பி தன்
பொது அறிவு வளர நானும் ஒரு காரணம் என்று எழுதி
இருந்தார், நேரம் வரும் போது அந்த மெயில் உங்கள்
பார்வைக்கு வரும்.ஆதரவு தரும் அனைவருக்கும் நன்றி.
***********************************************
பயம் அறியான் அப்படின்னு ஒரு படம் வரபோகுது அதில்
தற்போது உதயதாரா அவர்கள் கதாநாயகி வேஷம் கட்டுகிறார்.
புதுமுக நடிகர் கதையின் நாயகனாக நடிக்கிறார்.நமது
பொல்லாதவன் புகழ் கிஷோரும் இருக்கிறார் சரி இது அல்ல
விஷயம்....
சில பட ஸ்டில்கள் என்னை ஈர்த்தன இதோ உங்கள்
பார்வைக்கும் எல்லோரும் வாலை நீட்டாதே என்பார்கள்
ஆனால் இந்த ஹீரோவுக்கு நாக்கை நீட்டாதே என்று சொல்ல வேண்டும் போல...(ஏன்டா ஜெட்லி அவர் நாக்கு அவர்
நீட்டுராறு உனக்கு என்னடா என்று நீங்கள் கேட்பது சரிதான்).
மனதை ஒரு நிலைப்படுத்தும் கேள்வி:
இந்த ரெண்டு படத்துக்கும் என்ன வித்தியாசம்??

ஹீரோ ஒரு படத்தில் இடது புறம் இருக்கிறார் இன்னொரு
படத்தில் வலது புறம் இருக்கிறார் என்று தயவு செய்து
சொல்லாதிங்க...படத்தை நல்லா பாருங்க வேறு வேறு
பெண்கள்.இதில் இருந்து என்ன தெரியுது கதாநாயகியை
மாற்றி விட்டார்கள்.(கதாநாயகி மாறினாலும் அதே சீனை
திரும்பவும் படம் எடுத்த இயக்குனர் வாழ்க என்று ஹீரோ
மனதில் நினைத்திருப்பார்!!)
********************
புடவையில் முமைத்கான்:
திரையில் எப்போதும் கர்சீப்பை விட சிறியதாக ஆடையை
அணிந்து வரும் முமைத்கான் பவுர்ணமி நாகம் என்ற
டப்பிங் படத்தின் பாடல் வெளியிட்டு விழாவுக்கு முழு
நீள புடவையுடன் வந்து நம்மை கண்ணீர் கடலில்
ஆழ்த்தினார்.
அந்த விழாவில் நடிகர் கருணாஸ் பேசும் போது
முமைத்கானுடன் தான் நடித்தது தான் செய்த பெரும்
பாக்கியம் என்றும் அதற்காக அவர் கடவுளுக்கு நன்றி
கூறியதும் நம்மை மெய் சிலிர்க்க வைத்தது.
****************************************
இந்த வார பொது அறிவு கேள்விகள்:
# தற்போது கலைமாமணி விருது பெற்ற தளபதி யார்?
A. புரட்சி தளபதி விஷால்
B. இளைய தளபதி விஜய்
C. சின்ன தளபதி பரத்
(மினி தளபதினு யாராவது அடுத்து வர போறாங்க!!)
# அடுத்த சிம்ரன் என்று இயக்குனர் ஷங்கர் யாரை கூறினார்??
A.பறவை முனியம்மா
B.தமன்னா
C.சுனைனா
பதில் தெரிந்தால் 55540 என்ற எண்ணுக்கு அனுப்ப வேண்டாம்
மீறி அனுப்பினால் உங்கள் கைப்பேசியில் மூன்று ரூபாய்
போய் விடும்.பதில் தெரியாதவர்கள் கமெண்ட் செய்து கேட்டு
தெரிந்து கொள்ளலாம்.
இந்த பொது அறிவு செய்திகள் அனைவரையும் சென்று அடைய
ஒட்டு போடவும்....
நன்றி: indiaglitz.com
உங்கள்
ஜெட்லி சரண்.