Friday, June 26, 2009

நாடோடிகள்.....விமர்சனம்

நாடோடிகள்

நண்பனின் காதலுக்கு உதவ போய் தங்கள் வாழ்க்கையை
தொலைத்த மூன்று நண்பர்களின் கதை.பிறகு அந்த
நண்பன் தங்களுக்கு துரோகம் செய்ததை எண்ணி என்ன செய்றாங்க அப்படின்னு நீங்க தியேட்டர்ல பாருங்க.....
படத்தின் திரைக்கதை மிக அருமை. படம் ஓடும்
நேரம் அதிகம் என்றாலும் (2:45 minutes) போர் அடிக்காமல்
செல்கிறது.

சசிகுமார் நட்புக்காக உயிரையும் தரும் பாத்திரம்.
ஆள் இதில் கொஞ்சம் கலகலப்பாகவே திரிகிறார்.
காதல் செய்கிறார், டான்ஸ் ஆடுகிறார். தன் நண்பன்
துரோகம் செய்து விட்டான் என்று தெரிந்தவுடன்
தன் கண்களில் கோப அனலை கக்குகிறார். இந்த
மாதிரி நமக்கு ஒரு நண்பன் இல்லையே என்றும்
ஏங்கும் அளவுக்கு.



அடுத்து பரணி கல்லூரி படத்தில் வந்த பையன், இவரின் காமெடி
சான்ஸ்ஏ இல்லை.இவருக்கு நடுவுல காது கேக்காம போய்டும்,
அப்போ கூட ஆள் பின்னுவார். கடைசியில் நண்பனை கொல்ல
துடிக்கும் அந்த காட்சிகளில் உண்மையிலே செம.


விஜய் செ-28 புகழ், தனக்கு கொடுத்த பாத்திரத்தை கச்சிதமாக
செய்திரிக்கிறார். இவரின் அப்பாவாக வரும் புதுமுகம்
நச்சென்று மனதில் நிற்கிறார்.பையனின் காதலுக்கு அவரே
தூது போகிறார்.விஜய்க்கு கால் போனவுடன் தன்னம்பிக்கையாக
அவர் கூறும் வசனங்கள் டச்சிங்.

படத்தின் முதல் பாதியே ஒரு படத்தை பார்த்த திருப்தி
கிடைத்து விடும். இடைவேளை முன்னால் வரும் சேஸ்
காட்சிகள் அருமை.தன் நண்பனின் லவ் ஜெயிக்க சசி
அண்ட் கோ பண்ணும் தியாகங்கள் நட்பின் அருமையை
நமக்கு உணர்த்துகிறது.படத்துக்கு ஒளிப்பதிவு மிக பெரிய
பிளஸ். அந்த விளம்பர பிரியர் வரும் காட்சிகளில் தியேட்டர்
அதிர்கிறது , சும்மா கலக்குறாரு. கஞ்சா கருப்பு தன்
பங்குக்கு சிரிக்க வைக்கிறார்.


படத்தில் நாயகிகளுக்கு அவ்வளவு வேலை இல்லை.
அந்த சிவா சம்போ பாடல் காட்சிக்கு விறுவிறுப்பு தருகிறது.
ஆகா மொத்தத்தில் படம் சூப்பர். கடைசியில் கொஞ்சம்
சுப்ரமணியபுரம் வாசம் அடித்தாலும் படம் நச்.
ரொம்ப நாள் கழித்து ஒரு நல்ல சினிமா பார்த்த
திருப்தி கிடைத்தது.இயக்குனருக்கு வாழ்த்துக்கள்.



ஜெட்லி டவுட்:

சசி அண்ணே தன் நண்பனின் காதலை எத்தனை பேர்
அடித்தாலும் தூரத்தினாலும் சேர்த்து வைக்கிறார்.
(நண்பனின் அம்மா M.P, நண்பனின் காதலியின் அப்பன்
பெரிய தொழிலதிபர்.)

ஆனா சசி அவர்கள் அடுத்த தெருவுல இருக்கிற தன்
காதலி அத்தை பெண்ணை விட்டு கொடுப்பது, கொஞ்சம்
இடிக்குது. (இருந்தாலும் சசி அண்ணே உங்க நேர்மை
எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு)

ஜெட்லி பஞ்ச்:

நாடோடிகள் படம் பார்த்த பின் நண்பனின் காதலை சேர்த்து
வைக்க பல நண்பர்கள் தயங்குவார்கள்.


நீங்கள் பெற்ற விவரம் அனைத்து மக்களையும் சென்று அடைய
ஒட்டு போடுங்கள்.


நன்றி:indiaglitz
உங்கள்
ஜெட்லி

Thursday, June 25, 2009

இது எங்க ஏரியா.......

இது எங்க ஏரியா.......


நம்ம சென்னை குறித்து பல்வேறு தகவல்களை
உங்களுடுன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.முதலில்
எங்க ஏரியா திருவான்மியூர் அமைந்து உள்ள தியேட்டர்கள்
குறித்து கூறுகிறேன்.


(திருவான்மியூர் சிக்னல்)

தியாகராஜா தியேட்டர்:

திருவான்மியுரின் பெரிய அடையாளம் இந்த தியேட்டர், பல
வருடங்கள் முன்னாடி கட்டப்பட்டது. ஆனால் DTS, A/C,
QUBE போன்று அனைத்து வசதிகளும் கொண்டுள்ள ஒரு
நடுத்தர மக்களுக்கு ஏற்ற தியேட்டர்.கிழே கட்டணம் 28
ரூபாய் பால்கனி 50 ரூபாய்.

முன்னணி மற்றும் எதிர்பார்ப்புகளுடன் வரும் படங்களுக்கு
கண்டிப்பாக முதல் மூன்று நாட்கள் பால்கனி கவுண்டரில்
டிக்கெட் தர மாட்டர்கள்.தியேட்டர் ஊழியர்களே ப்ளாக் டிக்கெட்
விற்ப்பார்கள்.அட்வான்ஸ் BOOKING என்றால் என்னவென்று
கேட்பார்கள். தயவு செய்து பேப்பர் பார்த்து விட்டு யாரும்
முன் பதிவுக்கு வருவதை தவிர்ப்பது நல்லது.


இங்கே முதல் நாள் முதல் படம் பார்ப்பது போருக்கு சென்று
திரும்புவது போல. ஒரு சின்ன கேட் வழியாக 400 பேரை
உள்ளே தள்ளுவார்கள்.நான் கடைசியாக அஜித்தின் பில்லா படம்
முதல் நாள் பார்க்க சென்றேன்.உள்ளே போகுபவர் போலீஸ் லத்தி அடியுடன் தான் படம் பார்க்க வேண்டும், ஏன் என்றால் அவளோ
தள்ளு முள்ளு.நான் படம் ஆரம்பித்து சில நிமிடங்கள் கழித்து சென்றதால் லத்தி அடியில் இருந்து தப்பி விட்டேன். இல்லன பழுத்து இருக்கும்.பார்க்கிங் வசதி கொஞ்சம் கம்மிதான்.

ஜெட்லியின் பரிந்துரை:

குடும்பத்துடன் செல்பவர்கள் கொஞ்சம் உஷாராக தான்
போக வேண்டும்.ஏன் என்றால் பக்கத்திலயே டாஸ்மாக்
கடை உள்ளது.

**********************
ஜெயந்தி தியேட்டர்:

இதுவும் பழமையான தியேட்டர் தான். இன்னும் பழமையாகவே
இருப்பது தான் கொடுமையான விஷயம்.ஏதோ தர்மத்துக்கு
நடத்துவது போல் இயங்கி கொண்டிரிக்கிறது. இந்த தியேட்டரில்
A/C,AIR,QUBE,DTS போன்று எதுவுமே இல்லை. பால்கனி டிக்கெட்
விலை 25 ரூபாய் தான், கிழே இருபது ரூபாய் தான்.

நான் இந்த தியேட்டரில் கடைசியாக ஜெயம்கொண்டான் படம்
பார்த்தேன்.பொதுவாக நான் ஜெயந்தி பக்கம் தலை வைத்து படுப்பது கூட இல்லை சூழ்நிலை காரணமாக சென்றோம், பால்கனி
மாட்டு கொட்டாய் போன்று இருந்தது.மின் விசிறி ஓடியும் காத்து
வரவில்லை, இருக்கை அருகே முழுவதும் பாக்கு தூப்பி கொடுமையாக இருந்தது.


படத்தின் போது சவுண்ட் ஸ்க்ரீன் அருகே இருந்து வருவதால்
ஒன்றும் தெளிவாக விழவில்லை,முக்கியமா ஸ்க்ரீன்
மஞ்சள் கலரில் தெரிந்தது. இங்கே படம் பார்த்தால் கண்
கெட்டுவிடும் அது மட்டும் தான் புரிந்தது. தியேட்டர் என்று
சொல்லமுடியாத ஒரு புரியாத புதிர் தான் ஜெயந்தி தியேட்டர்.


ஜெட்லியின் பரிந்துரை:

இங்கே படம் பார்த்தால் நல்ல படம் கூட உங்களுக்கு
பிடிக்கமால் போய் விடும்.நீங்கள் குளித்து விட்டு வர
வேண்டிய அவசியம் இல்லை தியேட்டரில் உள்ள
புழுக்கமே உங்களை வியர்வையால் குளிப்பாட்டி விடும்.

**********************


கணபதிராம்:

இந்த தியேட்டர் இப்போதைக்கு ஒரு அளவு பரவாயில்லை.
நல்ல விசாலமான பார்க்கிங், முன் பதிவு வசதி உண்டு.
நான் தற்போது பார்த்த சில படங்கள் இந்த தியேட்டரில்
இருந்து தான் பார்த்தேன்.பால்கனி டிக்கெட் அம்பது ரூபாய்
கிழே சரியாக தெரியவில்லை.

சீட் வசதி நன்றாக இருக்கிறது, ஆனால் பல சீட்கள் உடைக்க
பட்டிரிக்கின்றன. மொக்கை படம் பார்த்த ரசிகர்கள் வெறியில்
உடைத்திருக்கலாம் என தெரிகிறது.மிச்ச படி சவுண்ட்,A/C
எல்லாம் அருமையாக இருக்கும்.

ஜெட்லியின் பரிந்துரை:

கணபதிராம் காதலியுடன் படம் பார்ப்பதற்கு ஏற்ற தியேட்டர்.
ஏன் என்றால் நிறையே மொக்கை படங்கள் ரிலீஸ்
செய்கிறார்கள்.

போனஸ் செய்தி:

சில காலங்களுக்கு முன் ஷகீலா படங்களை மக்களுக்கு
அளித்த பெருமை கணபதிராம் தியேட்டர்க்கு இருக்கிறது.


உங்களுக்கு பிடித்து இருந்தால் ஓட்டையும் போட்டு போங்க.
வேற ஏதாவது தியேட்டர் பத்தி தெரியும்னா கமெண்ட் பண்ணுங்க......

உங்கள்
ஜெட்லி

Tuesday, June 23, 2009

பொடிமாஸ்.....

பொடிமாஸ்....


நல்ல ஜோக்

பெண் உதவியாளர்: "சார், உங்கள் மனைவி போன் செய்து இருக்கிறார்,உங்களை போனில் முத்தமிட வேண்டுமாம்."

மேனேஜர்:"வாங்கி வெச்சுக்க, அப்புறம் எனக்கு குடு".!!!!!

***************************
பொன்மொழிகள்:

படித்தது:

# மோசமானவர்கள்தான், மிகச்சிறந்த அறிவுரைகளை
அளிக்க முடியும்.

-பிலிப் பெய்லி.


# பெண்கள் நமக்கு சோதனையான காலத்தில் ஆறுதல்
அளிக்கிறார்கள்.பெண்களே இல்லாவிட்டால் ஆண்களுக்கு
ஆறுதலே தேவைப்படாது.

-டான் ஹெரால்ட்.

************************
அழகான காதல் படம்


(இதுக்கு பேர் தான் நண்பனின் காதலுக்கு உதவி செய்வதோ )

*************************

நான் எழுதியது:

நான் அவளை பார்த்தேன்
அவள் என்னை பார்த்தாள்
பூ போல் சிரித்தாள்
செல்லமாய் வெட்கப்பட்டாள்
என் உடம்பு சிலிர்த்தது
அவள் அருகில் சென்றேன்
பின்பு தான் புரிந்தது
அவள் ஹெட் போனில் யாருடுனோ பேசி கொண்டிரிக்கிறாள் என்று...........

***************************
டாஸ்மாக் பக்கங்கள்:

அவன் என்னை பாரில் பார்த்தான்
அவன் என்னை காரில் அழைத்து வந்தான்
அவன் என் மேலாடையை திறந்தான்
அவன் என்னை உதட்டில் வைத்தான்
கோபம் கொள்ளாதீர் , நான் ஒரு மது பாட்டில்.






*********************************

மாயாண்டி குடும்பத்தார் நமக்கு உணர்த்தும் பாடம்.

நண்பர் சுகுமார் இந்த படத்தை முதல் நாளே பார்த்து
விட்டார்.நான் அவருக்கு ரொம்ப பெரிய மனசு என்று
கிண்டல் அடித்தேன்,கடந்த வாரம் தான் இந்த படத்தை
நான் பார்க்க நேர்ந்தது.ச்சே, எப்படி இந்த படத்தை மிஸ்
பண்ணோம் என்று எனக்கு தோன்றியது. உண்மையில்
படம் மிக அருமையாக இருந்தது.பொன்வண்ணன்,சீமான்
மிகவும் இயல்பாக நடித்து இருந்தனர்,அவர்களை போல்
நமக்கு அண்ணன்கள் இல்லையே என்று தோன்றுமளவுக்கு
தங்கள் நடிப்பு திறமையை வெளிப்படித்தி இருந்தனர்.
படத்தில் ஒரு குறை என்றால் அது தருண் கோபி
காதல் காட்சிகள் தான் மிக கேவலமாக இருந்தன.படத்தின்
போது சில காட்சிகளில் என்னை அறியமால் என் கண்ணில் கண்ணீர் தூளிகள் எட்டி பார்த்தன. ஆனா, இந்த படத்தில்
இருப்பது போல் அண்ணன்மார்கள் இப்போது யாருமில்லை
சிலரை தவற.ஒரு ஆபாசமில்லாத குடும்ப படம்,அன்பு
மட்டுமே நிலையானது என்பதை கூற வந்துள்ள படம்
மாயாண்டி குடும்பத்தார்.


பிடித்தது:

படத்தில் சீமான் பேசும் வசனம்:

"இந்த காலத்துல கள்ள காதல் கூட நாலு பேருக்கு
தெரிஞ்சு செஞ்சுராயிங்க ..ஆனா கூட பிறந்த பிறப்புக்கு
ஒருத்தர்க்கும் தெரியாம தானே உதவ வேண்டி இருக்கு."
**********************************************

நன்றி: தினத்தந்தி

ஹென்றி வில்லியம் ஆலிங்கம்.(Henry William Allingham )


மேல உள்ள ஹென்றி தாத்தாவுக்கு போன ஜூன் ஆறாம்
தேதி தன் 113 வயதை அடைந்தார் . உலகத்தில் வாழும்
அதிக வயதானவரில் இவரும் ஒருவர், இந்த தாத்தா.
இவர் இரண்டு உலக போரிலும் பங்கெடுத்து கொண்டவர்.
சரி என்னடா மேட்டர் அப்படின்னு கேக்குறிங்களா?....

இவரின் வாழ்வின் ரகசியம் குறித்து கேட்டதற்கு:

மது, புகை பிடிப்பது, பெண் இந்த மூன்று பழக்கங்களும்
தான் இந்த வயது வரை தன்னை வாழ வைப்பதாக
அவர் கூறியுள்ளார்.


டிஸ்கி:குடி குடியை கெடுக்கும்,புகை பழக்கும் உடலுக்கு
கேடு, ஒருத்தனுக்கு ஒருத்தி என்பதே சிறந்தது.

****************************

உங்கள்

ஜெட்லி

Sunday, June 21, 2009

முத்திரை -- திரை விமர்சனம்.

முத்திரை

முத்திரை படம் பார்ப்பது சொந்த செலவில் சூனியம் வைத்து
கொள்வதற்கு சமம், நான் தெரிந்தே வைத்து கொண்டேன்.
கார்த்திகை பாண்டியன் அவ்வளவு தூரம் சொல்லியும் நான்
முத்திரை போக வேண்டிய சூழ்நிலை வந்துவிட்டது.
யுவனா இசை என்று கேட்கும் அளவுக்கு பாடல்கள் மிக
கேவலமாக இருக்கின்றன.மொத்தத்தில் படம் மொக்கையோ
மொக்கை. படத்தை பத்தி பேசி அதிக டைம் வேஸ்ட் பண்ண
வேண்டாம்.





முத்திரை படம் பார்த்த தியேட்டர்ல நடந்த சில சுவையான
விஷயங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.


# படத்தில் ஒரு காட்சியில் மஞ்சுரியின் அப்பா பேசும் வசனம்
"நான் இதுவரைக்கும் எதுக்காகவும் தலை குனிஞ்சது இல்ல,
இப்ப உன்னால......"


தியேட்டர்ல ஒரு ரசிகரின் குரல்:

"டேய் நாயே சாணி மிதிச்ச கிழே குனிய மாட்டியாட...."

# டேனியல் பாலாஜியை க்ளோஸ்-அப் ஷாட் காட்டும் போதெல்லாம்
ஒரு
ராசிகர்

"ஐயோ , க்ளோஸ்-அப் ஷாட் வேணாங்க. முடியுல"...

# எனக்கு முன் இருக்கையில் அமர்ந்து இருந்த நபர் ராக்கி சாவந்த்
மற்றும் லக்ஷ்மி ராய் பாட்டின் நடன காட்சியின் போது எட்டி
எட்டி பார்த்து ரசித்தார். கொஞ்ச விட்ட ஸ்க்ரீன் உள்ளையே
போய்டுவார் போல.
(எனக்கு என்ன வருத்தம்னா எனக்கு பாதி
ஸ்க்ரீன் தெரியவில்லை).

நான் என் முன் இருக்கையில் உள்ள நபரின் முகத்தை காண
ஆசைப்பட்டேன்.இடைவெளி வந்தது சரி முன்னால் சென்று
பார்ப்போம் என்று நினைத்தால் அந்த நபர் நன்றாக தூங்கி
குறட்டை விட்டு கொண்டிரிந்தார்.

போனஸ் செய்தி:

இடைவெளி முடிந்து படம் ஆரம்பித்தவுடன் வெளிய சென்ற
அந்த முன் இருக்கை நபர், திரும்பி உள்ளே வர வில்லை.
(தப்பிச்சிட்டார் , ரொம்ப விவரமானவர்)


# இந்த படத்துல்ல ஏதாவது புதுசா செய்யனும்னு,லக்ஷ்மி ராய்
இடுப்பில் தாலியோடு அலைகிறார்.
(கேக்கவே கேவலமா இல்லை)

# லக்ஷ்மி ராய் திரையில் தோன்றி அழும் காட்சி வந்தால்
இங்கு படம் பார்த்து கொண்டு இருக்கும் ரசிகர்கள்

"கவலைப்படாதே டோனி அடுத்த தொடர்ல பின்னிடுவார்"
என்று கத்துகிறார்கள்.

# நிதின் சத்யாவின் நடிப்பு திறமையை கண்டு ஒரு ரசிகர்
வெறி வந்து

"சத்யா உன்னை மட்டும் ரோட்ல பார்த்தேன் பின்னிடுவேன்"
என்று வெறியோடு கத்தினார்.

# டேனியல் பாலாஜி பாடல் காட்சிகளில் ஏதோ லக்ஷ்மி ராயை
கற்பழிப்பது போல் பார்த்து கொண்டே கையையும் காலையும்
ஆட்டுகிறார்.


# லாஜிக் இல்லாத படம் முத்திரை ஒரு சின்ன உதாரணம்
" ஒரு பிக் பாக்கெட் திருடன் திடிர்னு முதலமைச்சர்
கைபேசிக்கு கால் பண்ணுவாராம்...."

முத்திரை பார்த்ததில் நேத்து நித்திரையை தொலைத்த
அப்பாவி நான். நீங்கள் உஷாரா இருங்க மக்களே.......

ஜெட்லி பஞ்ச்:

மொக்கை படம் பாக்கறது என் தப்பு இல்ல படம் எடுத்தவன்
தப்பு.

மக்கள் அனைவரையும் காப்பாற்ற ஒட்டு போடுங்கள்.


நன்றி: indiaglitz
உங்கள்
ஜெட்லி

Saturday, June 20, 2009

காதல் செய்ய ஏற்ற இடம்?

காதல் செய்ய ஏற்ற இடம்?

***************************
நேத்து நைட் என் மனசாட்சி என்கிட்ட வந்து ஒரு கேள்வி கேட்டுச்சு...
"டேய் ஜெட்லி கண்ட கண்ட மொக்கை பதிவலாம் போடுறியே,
நாலு பேருக்கு நல்லது செய்யுற மாதிரி எப்ப பதிவு போட போற ...."
என்று கேட்டது.


"சரி காதலர்களுக்கு உதவியா இருக்குற மாதிரி ஒரு பதிவு போடுறேன்" அப்படின்னு சொன்னேன்.


தீடிர்னு அவன்(மனசாட்சி) சிரிக்க ஆரம்பிச்சு
"டேய் உனக்குதான் காதலும் பிடிக்காது, காதல் செய்ரவங்களையும்
பிடிக்காதே. நீ என்ன உதவி செய்ய போற".


அவனை(மனசாட்சி) விடுங்க, அதற்காக தான் இந்த பதிவு... ஸ்பெஷல் காதலர்கள் பதிவு.

***********************

# முதல்ல நீங்க இந்த குழந்தைகள் பூங்கா, வண்டலூர் ஜூ
போன்ற இடங்களுக்கு போவதை தயவு செய்து நிறுத்தி கொள்ளுங்கள்.

சின்ன பசங்களை கூட்டிட்டு பாம்பு, பறவையை
பாக்க வந்த நீங்க கண்டதையெல்லாம் பாக்க வைக்கிறிங்க.



#அப்புறம் இந்த அண்ணா நகர் டவர் பூங்கா பக்கம் போக
முடியுல, அப்படி போனாலும் அந்த டவரை சுத்தி பாக்க
முடியுல. செவுரு புல்லா ஒரு காதல் வசனம் பிளஸ்
முகம் சுளிக்கும் வசனம். அந்த டவர் ஏறுறதுக்கு குள்ள
ஒரு பத்து காதல் ஜோடி வழியை மறைச்சி உட்காரிங்க.
நாங்கலாம் டவர் பாக்க வந்தோம் நீங்க என்னன்ன எங்களுக்கு
ஓசியில மலையாளம் படம் காட்றிங்க. அப்புறம் ஏன் mms
எல்லாம் வராது.


டேய் ஜெட்லி என்னடா லவ்வர்ஸ்க்கு ஹெல்ப் பண்றேன்
சொல்லி டிப்ஸ் கொடுப்பேன்னு பார்த்தா நீ எங்களையே
கலாய்க்கிரியா என்று நீங்கள் கூறுவது என் காதில் விழுகிறது.
இதோ வரேன் இருங்க அடுத்தது அதான்........



(பின்வரும் சம்பவம் அனைத்தும் நான் பார்த்தவையே,
எனக்கு இது மாதிரி எதுவும் அமைந்ததில்லை, நான் ஒரு
பார்வையாளன் மட்டுமே)


சரி அப்போ காதலர்களுக்கு ஏத்த இடம் எது அப்படின்னு பார்த்தா


# தியேட்டர் தாங்க, யாருக்கும் எந்த வித பிரச்னையும் இல்ல.
ஆனா தயவு செய்து புது படம் மற்றும் கூட்டமான தியேட்டர்க்கு
எல்லாம் போகாதிங்க,ஏன்னா திருப்பியும் அது உண்மையாக படம்
பார்க்க வந்தவர்களுக்கு தொந்தரவு கொடுக்கும். மொக்கை படம்
போன கூட்டம் இருக்காது இருந்தாலும் உங்க காதல் வேலையை நீங்க சவுண்ட் இல்லாம பண்ணா நல்ல இருக்கும்.இப்படிதான்
பாருங்க நம்ம கேபிள்சங்கர் அண்ணே , ராகவன் படத்துக்கு போய் ரொம்ப பயந்துட்டார்.


(எனக்கும் இந்த மாதிரி ஒரு அனுபவம் இருக்கு இதை கிளிக்
செய்து படிக்கவும்)
,




# சென்னை பக்கத்தில் இருக்கும் மாயாஜால் யாரை நம்பி
கட்டிவச்சிருகாங்க நினைச்சிங்க, காதலர்களின் சொர்க்க பூமிங்க
அது.ஆனா காதலன் பர்ஸ் காலி ஆயிடும்.இங்கே போய் படம் பார்த்தா,ஹோ ஸாரி நீங்க படம் பாக்க மாட்டிங்க இல்ல.
இங்கே போய் உட்கார்ந்த யாருக்கும் எந்த வித தொந்தரவும்
இருக்காது.சில மொக்கை படம் ஒரு ஷோ மட்டும் ஓடும் அது
தான் நீங்க தேர்ந்து எடுக்க பட வேண்டிய படம். ரெண்டு பேர் இருந்தா கூட புல் ஏ.சி போட்டு படத்தை போடுவாங்க.

எப்படி நம்ம டிப்ஸ் யூஸ்புல்லா இருந்ததா?.....

இந்த விஷயத்தை அனைவரும் படிக்க, நீங்க ஒரு சின்ன
விஷயம் பண்ணுங்க.... ஒட்டு போட்டு போங்க.

உங்கள்
ஜெட்லி