Tuesday, December 14, 2010

அய்யனார் - மொக்கையா சக்கையா??

அய்யனார்....






நிறைய பேரு நீங்க ஏன் கல்யாணத்துக்கு அப்புறம் முதல் படமா நகரம்
பார்த்தீங்கன்னு கேலியும் கிண்டலுமா கேட்டு, காத்திருந்து நல்ல படம்
வரும் போது போய் இருக்கலாம்னு சொன்னாங்க. நல்ல படம் எப்ப
வர்றது நான் எப்போ போய் படம் பார்க்குறதுனு சொல்லிட்டு இந்த வாரம்
அய்யனார் போய்ட்டேன் ஸ்வர்ண சக்தி அபிராமியில் செம கூட்டம்
வாஷ்ரூமில் மட்டும்னு சொல்ல வந்தேன் யுவர் ஆனர்...கொஞ்சம் சின்னது
தான் அப்புறம் கொஞ்ச நேரத்தில் அதுவும் காலி ஆயிடுச்சு தியேட்டர் மாதிரி !!

அய்யனார் படத்துக்கு போறதுக்கு முக்கிய காரணம் தமன்....பாடல்களில் மட்டும் அல்லாமல் பின்னணி இசையிலும் தமன் கல் உடைத்து இருக்கிறார். அப்புறம் ஆதி ஈரத்துக்கு அப்புறம் வர்ற படம் எப்படி பண்ணி இருக்கிறார் என்று பார்க்கலாம்னு போனேன். அவர் உடம்புக்கு சண்டை காட்சி எல்லாம் ஓகே தான் ஆனா கொஞ்சம் ஓவர்டோஸ் மாதிரி இருந்தது.


சந்தானம், முதல் பாதியில் மட்டுமே வந்தார் வர்ற சீன்லாம் நல்ல தான் இருந்தது...ஆனா ரெண்டாவது பாதியில் ஆளே காணோம்...நாயகிக்கு ஒண்ணும் பெருசா வேளை இல்லை...ஏதோ ரெண்டு பாட்டுக்கு உதவி பண்ணி இருக்காங்க.முக்கிய கேரக்டர் ஆதியின் தம்பியாக வரும் விஷ்ணுப்ரியன் நினைத்தாலே இனிக்கும் படத்தில் வருவார். நல்லாவே பண்ணி இருந்தார். ஆனா ஏன் அவருக்கு ஆதி மேல இவளோ காண்டுனு தெரியலை.

ஆதி, படம் ஆரம்பத்தில் இருந்து ஊதாரி, குடிகாரனா காட்டிட்டு தீடிர்னு வாலிபால் காமிச்சிட்டு கோச்னு சொல்றாங்க...அப்புறம் தீடிர்னு மத்திய அரசு வேலை கிடைச்சுடுச்சுனு சொல்றாங்க.... அப்புறம் குடும்பமா சேர்ந்து பாட்டு பாடுறாங்க...படத்தை பார்த்துட்டு இருந்தப்போ நான் கொஞ்சம் குழம்பிட்டேன் எது ப்ளாஷ்பேக்னு தெரியலை....அப்போ அரைமணி நேரம் கழிச்சு படம் பார்க்கவந்த நாலு பேருக்கும் என்ன புரிஞ்சுருக்கும்னு யோசிச்சிட்டு இருக்கேன்....

இந்த படம் கமர்சியல் படமா இல்லை சஸ்பென்ஸ் படமா என்பதை இயக்குனர் தான் சொல்லவேண்டும். முதல் பாதி சூப்பர்ஆ போச்சு ஆனா இன்டெர்வல் டைம்ல படத்தோட மொத்த கதை, திரைக்கதை எல்லாத்தையும் யூகிக்க முடிஞ்சதும் அதுவே திரையில் வர்றதும் கொடுமையான விஷயம். மாவட்டம்னு ஒருத்தர் வந்து சிக்னல் கிடைக்கலன்னு நடு ரோட்ல வந்து பேசுறது ரொம்ப ஓவர்....சுந்தர புருஷன் படத்தில் இருந்து மாப்பிள்ளையாக வருபவர் இதிலும் மாப்பிள்ளையாகவே வருகிறார் என்பது லிம்கா புத்தகத்தில் இடம் பெற வேண்டிய சாதனையாகும்.


இந்த படம் ரொம்ப மொக்கை இல்ல ஆனா மொக்கை தான்.

அய்யனார் - வெறும் தேங்காய் நார்.

இந்த விமர்சனம் மாதிரி பல பேரை சென்று அடைய உங்கள் வாக்கினை போடுங்கள்...

நன்றி...

ஜெட்லி...(சரவணா...)

12 comments:

அகல்விளக்கு said...

Ithuvum oothikkicha machi....

Better luck next time.... :)

CS. Mohan Kumar said...

கல்யாணம் ஆன பின்னும் காமெடிய மெயின்டைன் பண்றிங்க வாழ்த்துகள்

Chitra said...

அய்யனார் - வெறும் தேங்காய் நார்.


...Jetli is back! Super!

Madurai pandi said...

idhuvum mokiaya!!! ah ah///

ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...

maamooo theatere noruks enga. unka veettula unkga blog padikkiraangkalaa? :))

கடைக்குட்டி said...

THEATRE NORUKS ILA...

HEROINE NU ORUTHAR IRUPAANGA.. AVANGALA PATHI ORU VAARTHA ILA...


MOTHATHIL IDHU JETLI-YIN VIMARSANAM ala !! ala!! ala!!!

hasan said...

happy to see review after longtime....

ஜெட்லி... said...

@ ரமேஷ்- ரொம்ப நல்லவன்(சத்தியமா) said...
maamooo theatere noruks enga. unka veettula unkga blog padikkiraangkalaa? :))

ஹ்ம்..படிக்கறாங்க....

ஜெட்லி... said...

@ கடைக்குட்டி said...
THEATRE NORUKS ILA...

HEROINE NU ORUTHAR IRUPAANGA.. AVANGALA PATHI ORU VAARTHA ILA...


MOTHATHIL IDHU JETLI-YIN VIMARSANAM ala !! ala!! ala!!!

//


யோவ்..தியேட்டர்ல ஆளே இல்லை...எங்கே இருந்து
நொறுக்ஸ் போடுறது....

ஜெட்லி... said...

அனைவருக்கும் நன்றிகள் பல...

பின்னோக்கி said...

ippa thaan siddhu +2 paarththuttu.. vantheen.. intha padam poiyirukkalam pola.

Anonymous said...

நல்லாருக்கு